Surah Al-Fathihah

 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)(அல்குர்ஆன் : 1:1)


اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.(அல்குர்ஆன் : 1:2)


الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏

(அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.(அல்குர்ஆன் : 1:3)


مٰلِكِ يَوْمِ الدِّيْنِ‏

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).(அல்குர்ஆன் : 1:4)


اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.(அல்குர்ஆன் : 1:5)


اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!(அல்குர்ஆன் : 1:6)


صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.(அல்குர்ஆன் : 1:7)